søndag den 15. marts 2009

கவியெழுதுதற் கல்வி.


ஒருவன் குதிரையில் வந்தான்.
மற்றவன் நடந்து வந்தான்.
நான் அடுத்ததாக என்ன செய்யப்போகிறேன் என்று சரியாகச் சொல்வாயானால் என் குதிரையைத் தருகிறேன்.
என்றான் குதிரயில் வந்தவன்.
நீ உன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இந்த நாட்டை விட்டே ஓடப்போகிறாய். என்றான் நடந்து வந்தவன்.
இல்லை, உன் பதில் தவறு. அடுத்ததாக இதை நான் செய்யப் போவதில்லை என்றாலும் என் குதிரையைத் தருகிறேன்.
பதில் தவறு என்றால் ஏன் குதிரையைத் தருகிறாய்..? கேட்டான் நடந்து வந்தவன்.
நீ எனக்குச் சொன்ன புத்திமதிக்கான அன்பளிப்பு இது என்றான் குதிரைக்காரன்.
எதிராளியிடமே ஐடியாக் கேட்பது வழமையாகிவிட்டது.
எங்களுக்கென்று ஒரு தனித்துவப் படைப்பாற்றல் அருகிக்கொண்டே போகிறது
தமிழ் நாட்டு அரசிலைப் போல.
எதிராளியின் பலத்திலும் பலவீனத்திலுமே..எங்கள் படைப்பாற்றல் தங்கியிருக்க வேண்டுமா..?
இலக்கியக்காரர் கூட ஏன் இப்படி நடக்கிறார்கள்..?
நான் மதிக்கும் பெரியோர்கள் கூட இப்படி சிறுமைப் படுகிறார்கள்.
இந்த வேதனகளை எங்கே கொண்டு சரி பார்க்க நான்..???
இப்படி ஒரு கவிதை எழுததொடங்கினான் அவன்.

6 kommentarer:

  1. ??¿¿ no entiendo nada de nada de nada! que idioma es?????

    SvarSlet
  2. தனித்துவப் படைப்பாற்றல் என்று எதைக் கருதுகிறீர்கள் சூர்யா?அநேக படைப்பாளிகள் தம் மன உணர்வுகளைத் தானே வெளிப்படுத்துகிறார்கள்?

    சில வேளை அவர்களுடய பார்வைகள் வேறு பட்டிருப்பதில்லை என்பதைக் குறிக்கிறீர்களா?'உண்மை' அதில் இல்லை என்று நினைக்கிறீர்களா? அல்லது சொல்லும் தைரியம் அவர்களிடம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

    இருக்கலாம். அவை ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.

    SvarSlet
  3. எழுத்து என்று பார்கையில் அழகான நடை.

    ஒரு சம்பவம் தொடங்குகிறது ...

    குதிரையில் வருபவன், நடந்து வருபவனிடம் கேட்க்கிறான் ...

    இது எந்த நிலை.

    அவனுக்கு இவன் செய்யப்போவது என்னவென்று எப்படித்தெரியும்.
    இவன் தான் கேட்டான் என்றால் அவன் எங்ஙனம் பதில் சொல்கிறான்

    இந்த காட்சிகள் மறக்கப்பட்டு பின்னர் துவங்கிறது விடயங்களின் சாதூர்யம்

    நல்ல அறிவுரை என்று ஏன் நினைக்கிறான்

    சொன்னான் என்பதற்காக செய்ய போகிறானா

    அல்லது அந்த நிலையின் விளிம்பில் இருந்து இருப்பானோ

    அட நிறைய சந்தேகம் வந்துடுச்சே எனக்கு

    -------------------------------


    அழகிய பயனம் எழுத்தில்.

    SvarSlet
  4. தொடருங்கள்..!

    SvarSlet