torsdag den 12. november 2009

kavithai

ஞானம்.







எல்லாமுமே அந்தந்த இடத்தில்
வைத்தாயிற்று.
அடுத்ததை எங்கே வைக்க என்று
எனக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.
அடுத்தது என்பது...............
எதை எடுத்தாயோ அதற்கப்புறம் எடுத்தது.

søndag den 8. november 2009

டீ யும் டா வும்

டீ யும் டா வும்

என் கனவுகளைத் தின்றுகொண்டிருந்தபோது
மேலும் ஒரு பிச்சைக்காரி வந்தாள்.
எனக்கேயில்லை உனக்குமா??
ம்......ம்..
பிடி இதுதான் மீதி, நான் தின்றதன் பாதி.
நான் ஒரு பாதி
நீ யொரு பாதி
என்ற கனவின் பாதியை
இப்பொழுதும் அந்தப் பைத்தியக்காரி
தின்று கொண்டிருகிறாள்.
நான் மீண்டும் கனவுப் பிச்சை எடுக்க வேண்டும்
எடுத்தால்தான் உனக்குக்கூட பாதி கிடைக்கும். என்ற
அறிவுரை கூட...
எட்டாமல்..இருப்பவளை
என்ன செய்ய...............
போய்த் தொலைங்கடீடீடீடீடீ..................!!!!!!!!