பின்னூட்டங்களின் சந்திப்பு
நிலவெறித்த ஒரு
பின்னிரவில்
பின்னூட்டங்கள் பேசிக்கொண்டன.
அ,ஆ,இ,ஈ என
நான்காய்
குழுவாய்
பிரித்து ஓய்ந்தபின்னர் அமர்ந்து கொண்டன
தத்தமது இருக்கைகளில்.
(காப்பியில் கண்ணானோரெ அதிகம். இங்கே காப்பி என்பதை பிரதி என்கிற அர்த்தத்தில் கண்ணுறுக)
....
அ,
சொல்லிற்று எனக்குக் கவிதைகள் பிடிக்குமென.
ஆ.........வோ ஆ வென விழித்து
இதற்கெல்லாமா என்றது.
இ,
சொல்லிற்று எனக்கு அரசியல் பிடிக்குமென.
ஈ யோ மெளனமாய் இருந்தது.
....
அவரவர்க்கான நண்பர்களுக்கு
பின்னூட்டமிடுவதே முறையென
முடிவெடுக்கும் போது
காப்பியும் வந்தது.
....
கை குலுக்கி , வாழ்த்துச்சொல்லி
கலைந்தன பின்னூட்டங்கள்.
....
என்னையும் கூட்டிச்செல்லுங்களேன் என்று
தடுக்கி விழுந்த பின்னூட்டம் ஒன்றின்
பிடிவாதச் சங்கொலி மட்டும்
கேட்டுக் கொண்டேயிருந்தது.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar