ஊடக தர்மர்கள்
ஓகோ
உங்களுக்கு ஊடகம் என்று பேர் வைத்தாயிற்றோ.
ம்ம்ம். நன்று.
நீங்க எல்லாம் சொல்வீர்களோ...
அதாவது
உண்மையை பொய் என்றும்
பூசனிக்காய்க்குள் சோற்றையும்.
உங்களையெல்லாம் என் வீட்டு யன்னல்களுக்கூடாக
கூரையின் அன்ரனாக்கூடாக
அனுமதித்துத் தொலைத்தேனே...
என் அம்மாவைத் திட்டவேணும்
அவளுக்காக உங்கள் சீரியல்கள்.
என் தாயகம் சிதைக்கப்படவில்லை
என்ற பொய்யை உண்மையாய்க் காட்டும்
வல்லமை படைத்தோரே...
கீழ் வெண்மணியில்
தாமிரபரணியில்..
செஞ்சோலையில்....
ஒருவரும் ஒன்றுக்காகவும் இறக்கவில்லை
என்கிற பொய்யையும்
அதனுடன் சேர்த்து
நீங்கள் கோவணம் கட்டவில்லை
என்ற உண்மையையும் சொல்லுங்கள்.
Abonner på:
Kommentarer til indlægget (Atom)
Ingen kommentarer:
Send en kommentar