søndag den 20. december 2009

கோளை(ழை)கள்.







மனங்களுக்குத் தெரியா
மனங்களின் மலையுச்சியில்
மனமும் உன் மனமுமாய்
மனவெளியில் காதலித்தோம்.

உண்மைதானே..!

மனசுக்கும் மனைவிக்குமான...
கொடுங் கூக்குரலில்...
மனதை நீ தொலைத்ததும்..

உண்மைதானே...

என்னை விட்டுவிடு...,
பொய்யன் நான்.
போய்த் தொலைகிறேன்.

(வி.மு க்கு சற்று முன்னால் எழுதப்பட்ட ...மரபுக் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது இது)

குறிப்பு..
வி.மு என்றால்
விவாகரத்துக்கு முன்.

tirsdag den 8. december 2009

கவிமனசு

கவிமனசு






எனக்கான கவிதையை
நான் எப்போ எழுதுதல் கூடும்.?

மற்றையோர்க்காய்..மற்றவரைப் பற்றியே
மற்றைய மொழியில்
மாற்றானோடு
மூடுதிரைகளினூடு நடத்தும்
உனதும் எனதுமான தொடர்பாட்டம் எப்போது நிற்கும்..?

எனக்கான மொழியில்
எனக்கேயான வெளியில்
அழகிய சந்தம்நிறை கவிகளை
நின் காதலொடு தொடுக்கும் நாள் எந்நாளோ..?

மீளாவடிமையாய்..சுந்தரனும்
மீராவும் ஆண்டாளும்
இதற்காகத்தானோ என்னவோ
யதார்த்தத்தில் இல்லாத கடவுளுடன் காதல் கொண்டனர்???