tirsdag den 8. december 2009

கவிமனசு

கவிமனசு






எனக்கான கவிதையை
நான் எப்போ எழுதுதல் கூடும்.?

மற்றையோர்க்காய்..மற்றவரைப் பற்றியே
மற்றைய மொழியில்
மாற்றானோடு
மூடுதிரைகளினூடு நடத்தும்
உனதும் எனதுமான தொடர்பாட்டம் எப்போது நிற்கும்..?

எனக்கான மொழியில்
எனக்கேயான வெளியில்
அழகிய சந்தம்நிறை கவிகளை
நின் காதலொடு தொடுக்கும் நாள் எந்நாளோ..?

மீளாவடிமையாய்..சுந்தரனும்
மீராவும் ஆண்டாளும்
இதற்காகத்தானோ என்னவோ
யதார்த்தத்தில் இல்லாத கடவுளுடன் காதல் கொண்டனர்???

Ingen kommentarer:

Send en kommentar