søndag den 20. december 2009

கோளை(ழை)கள்.







மனங்களுக்குத் தெரியா
மனங்களின் மலையுச்சியில்
மனமும் உன் மனமுமாய்
மனவெளியில் காதலித்தோம்.

உண்மைதானே..!

மனசுக்கும் மனைவிக்குமான...
கொடுங் கூக்குரலில்...
மனதை நீ தொலைத்ததும்..

உண்மைதானே...

என்னை விட்டுவிடு...,
பொய்யன் நான்.
போய்த் தொலைகிறேன்.

(வி.மு க்கு சற்று முன்னால் எழுதப்பட்ட ...மரபுக் கவிதையில் இருந்து எடுக்கப்பட்டது இது)

குறிப்பு..
வி.மு என்றால்
விவாகரத்துக்கு முன்.

1 kommentar:

  1. மனம் கனக்கச் செய்யும் கவிதை...நன்று சூர்யா..வெகு நாள் கழித்து உங்கள் வலைப்பக்கத்துக்கு வந்து...நிறைய எழுதுங்கள்..

    SvarSlet